பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 முதற் பராந்தக சோழன் வாணாதிராசன் என்ற பட்டத்தைப் பெற்றான் என்றும் கூறுகின்றது. அக்கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற 'வல்லாள' என்ற ஊர், வாணர்களின் தலை நகரமாகிய வல்லமாக 2 இருத்தல் வேண்டும். அன்றியும், அதில் குறிப்பிடப் பட்ட பகைஞரும் வாணர்களாகவே இருத்தல் வேண்டும். எனவே, வல்லத்தில் நடைபெற்ற போரில், பராந்தக சோழனும் இரண்டாம் பிருதிவிபதியும் ஒருங்கு சேர்ந்து வாணர்குல மன்னரை வென்றனர் என்பது நன்கறியப் படுகின்றது. இனி, வாணர் என்பார், பாலாற்றுக்கு வடக்கே சித் தூர் ஜில்லா வரையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகிய வாணகப்பாடி நாட்டைப் பண்டைக்காலத்தில் ஆட்சி புரிந்த ஓர் அரசர் மரபினர் ஆவர். அன்னோர், வல்லம், வாணபுரம் என்ற - நகரங்களைத் தம் தலை நகரங்களாகக் கொண்டு இரண்டு நூற்றாண்டுகள் அப்பகுதியில் ஆட்சி புரிந்தனர். அவர்கள் மாபலியின் வழியில் வந்தவர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்வதைப் பல கல்வெட்டுக் களில் காணலாம். அவர்களது நாடு பெரும்பாணப் பாடி என்றும் வடுகவழிமேற்கு என்றும் முற்காலத்தில் வழங்கப்பட்டது. தொண்டைமண்டலம் பல்லவர் ஆட் சிக்குட்பட்டிருந்த காலத்தில் வாணர்குல வேந்தர், அவர் கட்குத் திறை செலுத்திக்கொண்டு குறுநில மன்னராக இருந்துவந்தனர். முதல் ஆதித்தசோழன் அபராஜிதவர் மனை வென்று தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிய நாட்களில் வாணர் சுயேச்சை யெய்தி, பிறகு தனியரசு புரிந்துவந்தனர். ஆகவே, பாரந்தக சோழன் அவர்களை 1. Ep. Ind., Vol. IV, pp. 221-225. 2. வல்லம் என்பது வடார்க்காடு ஜில்லாவில் குடியாத்தந் தாலுகாவிலுள்ள ஓர் ஊர். இது தீக்காலிவல்லம் என்று பழைய கல்வெட்டுக்களில் காணப்படுகிறது ; பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்று; இந்நாளில் திருவலம் என்று வழங்கு கின்ற து. 3. S. I. I., Vol. III, No. 45. 4. Ibid, Nos. 46 and 47.