பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் அதிகாரம் கண்டராதித்த சோழன் கி. பி. 950-957 முதற் பராந்தக சோழன் இறந்த பின்னர், அவன் இரண் டாம் புதல்வனும் முன்னரே இளவரசுப்பட்டம் கட்டப் பெற்றிருந்தவனுமாகிய கண்டராதித்த சோழன் கி. பி. 953-ல் முடி சூட்டப்பெற்றுச் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாயினான்.! இவன் இராசகேசரி என்ற பட்டம் புனைந்து அரசாண்டான். இவன் தந்தை ஆட்சியின் இறுதி யில், இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாங் கிருஷ்ண தேவன் தொண்டை நாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் கவர்ந்துகொண்டமையால் சோழ நாடு மாத்திரம் இவன் ஆட் சிக்குட்பட்டிருந்தது, இவன் கல்வெட்டுக்கள் பாண்டி நாட் டில் யாண்டுங் காணப்படாமையால், சோழர்க்குத் திறை செலுத்திக்கொண்டு சிற்றரசனாய் வாழ்ந்துவந்த வீரபாண் டியன் என்பவன் இவன் காலத்தில் சுயேச்சை எய்திப் பாண்டி நாட்டில் தனியரசு புரியத் தொடங்கி யிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். அன்றியும், பாண்டி நாட்டில் காணப்படும் வீரபாண்டியன் கல்வெட்டுக்களாலும் இச்செய்தி உறுதி எய்துகின்றது. எனவே, இவன் தந்தை ஆளுகையின் கீழிருந்த பாண்டி நாட்டையும் வீரபாண்டியன் கைப்பற்றிக்கொண்டமையால் எஞ்சியிருந்த சோழ நாட்டை மாத்திரம் இவன் ஆண்டுவந்தனன் என்பது தெள்ளிது. எனினும், பாண்டி நாட்டை மீண்டுங் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணம் இவ்வேந்தனுக்கு இருந்தது என்று தெரி கிறது. ஆனால், அவ்வெண்ணம் இவன் ஆட்சிக்காலத்தில் நிறைவேறவில்லை. ஆனை மங்கலச் செப்பேடுகளும் திருவாலங்காட்டுச் செப்பேடு களும் இச்செய்தியை அறிவிக்கின்றன. Ep. Ind., Vol. XXII, No. 34; S. I. I., Vol, III, No. 205. 2. Ins. 548 of 1926; Ins. 624 and 625 of 1926.