பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டராதித்த சோழன் இவ்வரசன், காவிரியாற்றிற்கு வடக்கே கண்டராதித்தச் சதுர்வேதிமங்கலம் என்ற ஊர் ஒன்றை அமைத்தான் என்று ஆனைமங்கலச் செப்பேடுகள் கூறுகின்றன. அது, திருச் சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையம் தாலூகாவில் கொள் ளிடப் பேராற்றிற்கு வடகரையில் திருமழபாடிக்கு மேற்கே ஒருமைல் தூரத்தில் இந்நாளில் ஒரு சிற்றூராக உளது. இப்போது அதனைக் கண்டிராச்சியம் என்று வழங்குகின்றனர், இனி, கண்டராதித்தப்பேரேரி என்ற நீர்நிலை ஒன் றிருந்தது என்பது தென்னார்க்காடு ஜில்லா உலகபுரத்தி லுள்ள ஒரு கல் வெட்டால் அறியப்படுகிறது 1. அவ்வேரி, இம்மன்னன் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பெற்றதாதல் வேண்டும். இவ்வேந்தன் மிகுந்த சிவபத்தியும் அரிய செந்தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப்பெற்றவன். தில்லையம்பதியில் நடம்புரியும் திருச்சிற்றம்பலமுடையார் திருவடிகளில் பெரி தும் ஈடுபாடுடையவன். அப்பெருமான்மீது இவன் பாடிய திருப்பதிகம் ஒன்று, சைவத்திருமுறைகளுள் ஒன்றாகிய ஒன்பதாம் திருமுறையில் இருத்தல் அறியத்தக்கது) . அப் பதிகத்தின் இறுதியிலுள்ள திருக்கடைக் காப்புப்பாடலில் 3 இவ்வரசன் தன்னைக் ' கோழிவேந்தன் ' எனவும் • தஞ்சையர் கோன் ' எனவும் கூறி யிருப்பது உணரற்பாலதாம்; 1. Ins. 140 of 1919 2. திருவிசைப்பா, திருப்பல்லாண்டு (கழகப்பதிப்பு) பக்கங்கள் 87-91, 3. ' சீரான் மல்குதில்லைச் செம்பொனம்பலத்தாடி தன்னைக் காரார் சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன் கலந்த ஆரா வின்சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலைவல்லார் பேராவுலகிற் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே, கண்டராதித்தர் திருவிசைப்பா - கோயிற்பதிகம், பா. 10