பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

புகழேந்தி நளன் கதை



அவர்களுக்குத் தேவைப்படவில்லை; அது தேடிப் பெறவில்லை. பெண்களை மதித்த காலம் அது. அதனால் இந்தக்கூச்சலுக்கு அன்று தேவையே ஏற்படவில்லை.

அவள் உள்ளத்தில் வைத்துப் போற்றிய தெய்வம்; அதனால் பெயரை அவள் கூற அவள் நா பழகவில்லை.

“மன்னனுக்குத் தேர் ஒட்டி வந்துள்ளாரே அவர்தான் அவர்” என்றாள்.

நளன்தான் அயோத்தி மன்னனுக்குத் தேர் ஒட்டி வந்தான் என்பதை அவள் தந்தை அறிந்து கொண்டான்.

அவ்வளவுதான்; நளன் தன் மருமகன்தான்; என்றாலும் மாமன்னன்; அதற்கு உரிய சிறப்புத் தந்து ஆக வேண்டும்; ‘வீடியோ காமிராக்களை’ அழைப்பதுபோல் முரசு தப்பட்டை நாதஸ்வரம் இன்னும் இத்தியாதி கூச்சல் குழப்பங்களையும் உடன் வரச் செய்து பூக்களை எடுத்துத் தொடுத்து மாலையாக்கி நளனைச் சந்தித்தான்.

“மருமகனே வருக” என்று மதிப்புடன் அழைத்தான். அவன் மறுமொழி கூறாமல் மழுப்பத் தொடங்கினான்.

“யான் வாகுவன்” என்றான்.

அரசியல் பேசினான்; “மன்னர்கள் எனப்படுபவர் மக்களின் தொண்டர்களா தலைவர்களா” என்று கேட்டான் வீமன்.

“தொண்டு செய்வதற்காகத் தலைமை ஏற்றவர்கள்” என்று கூறினான்.

அவன் நுட்ப அறிவை வியந்தான். இவன் நளன்தான் என்பதை அறிந்தான்.

அரசனுக்குத்தான் இந்த நுட்ப அறிவு இருக்க முடியும் என்று தெரிந்தான்; தெளிந்தான்; அறிந்தான்.