பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

புகழேந்தி நளன் கதை



வழியாது? அடுத்த வேளைக்கு என்ன செய்வது? ஆட்சி செய்யத் தெரியுமே அன்றி உழைத்துப் பழகியது இல்லை. அடிமையாகக் கிடந்தால்தான் மிடிமை தீரும். மடியில் பூனையை வைத்துக்கொண்டு எங்கே போவது; அவள் அவனுக்குச் சுமையாகப் பட்டாள். சுவையாக இருந்தவள் அவள் அவனுக்குச் சுமையாக மாறினாள்.

“இவள் எங்கே கேட்கிறாள். நிம்மதியாகத் தாய் வீடு செல்க என்றால் தத்துவம் பேசுகிறாள். கொள்கைகளை அடுக்குகிறாள். விளக்கங்கள் தருகிறாள். மனைவியின் மாட்சிகள் இவை என்று ஒப்புவிக்கிறாள். எனக்கு அவள் தேவைதான்; முதலில் அவளுக்கு அவள் தேவை; அதை நிறைவேற்றட்டும்".

“வெளிச்சம் வந்தால் அவள் எங்கே சொல்லிக் கேட்கப் போகிறாள்? போகாதே போகாதே என் கணவா என்று பாடப் போகிறாள். முதலில் அவளை விட்டுச் செல்வதுதான் தக்கது” என்று நினைக்கத் தொடங்கினான்.

நிழல் போல் இவனைத் தொடர்ந்து வந்த கலியன் புழுவாக அவன் மூளையைக் குழப்பினான். அவன் அவளோடு வாழக் கூடாது என்பது அவன் கோட்பாடு. அவர்கள் ஒன்றிய வாழ்வு கண்டு வயிறு எரிந்து வந்தான். பிரிப்பது அவன் வேளை. ‘கூட்டு’ என்பதற்கு வேட்டு வைப்பதே அவன் நாட்டம். அவனும் இவன் மனத் திரிபுக்குக் காரணமாக இருந்தான்.

நளன் கண்ணுக்கு ஒரு புதையல் கிடைத்தது; அது பொன் அல்ல; ஒளிவிட்ட கத்தி, அந்தக் கத்தியாக மாறியவன் கலியன். அதை எடுத்தான்; தன்னையும் அவளையும் பிணித்துக் கொண்டிருந்த உடை அதனைக் கிழித்தான். அறுத்தான்; இரு கூறாக ஆக்கினான். அவள்வேறு தான்வேறு என்று ஆயினான். ‘விடுதலை’