பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1130முருகு சுந்தரம்



பின் ஏன் உடலுறவில் ஆண் பெண் என்ற பேதம்?” என்பது லார்காவின் விசித்திரமான வாதம்!

அமெரிக்காவில் இருந்தபோது, அவன் எழுதிய சர்ரியலிசக் கவிதைகள் நியூயார்க்கில் கவிஞர் (The Poet in New-york) என்ற தலைப்பில், லார்காவின் இறப்புக்குப்பிறகு வெளியிடப்பட்டன. இக்கவிதைகள் பிரெஞ்சு சர்ரியலிசக் கவிதைகளினின்றும் மாறுபட்டு, லார்காவின் தனித்தன்மையோடு அமைந்திருக்கின்றன. இக்கவிதைகளில் உள்ள உணர்ச்சிக் கொந்தளிப்பை (Tension) மற்ற சர்ரியலிசக் கவிதைகளில் காணமுடியாது. இக்கவிதைகள் வாழ்க்கையின் அடிப்படை உண்மைகளினின்றும் (Solid Reality) விலகாத அடிமனக் காட்சிகளைச் சித்திரிக்கின்றன.

முரட்டுக்காளைகளோடு போரிடும் வீரவிளையாட்டு, ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு. நம் நாட்டில் திரைப்பட நடிகர்களுக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்து (Sta value) அந்த நாட்டுக் காளைப்போர் வீரர்களுக்கு உண்டு. ஸ்பெயின் நாட்டுப் புகழ்பெற்ற காளைப்போர் வீரரும் தனது ஆருயிர் நண்பருமான மெஜியாஸ் காளைப்போரில் இறந்தபோது, வார்கா எழுதிய இரங்கற்பாடல்தான், அவன் படைப்பில் ஒப்பற்றது என்று எல்லாராலும் பாராட்டப்படுகிறது

அவன் முகத்தைக்
கைக் குட்டையால்
மூடுவதை
நான்-
விரும்பவில்லை.
கைக் குட்டையை
எடுத்து விடுங்கள்.

அவன்-
சுமந்து செல்லும் சாவு
அவனுக்கு
நன்கு
அறிமுகம் ஆகட்டும்

என்று பாடுகிறான் லார்கா. வீரன் சாவைக் கண்டு அஞ்சி முகத்தை மூடக் கூடாதல்லவா?

துவளாத துணிச்சலும்
பெருமிதமும் மிக்க
ஓர்
ஆண்டலூசிய வீரன்
இவனைப் போல் பிறக்க
இன்னும்
எத்தனையோ
நூற்றாண்டுகள் ஆகலாம்
அவன் புகழைப்பாடும்