பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41முருகு சுந்தரம்

பெற்றோர்களின் மணவிலக்கும், இராணுவப்பள்ளி அனுபவங்களும் ஆவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தின. தமது படுக்கையில் அமர்ந்து சாவை வேண்டி இறைவனிடம் அவர் மன்றாடிய நேரங்கள் உண்டு.

1899-1900 ஆம் ஆண்டுகளில் ரில்க் லோ ஆண்ட்ரியல் சலோமி என்ற பெண்ணுடன் ருசியப்பயணம் மேற்கொண்டார். அங்கே எழுத்தாளரும் தத்துவஞானியுமான லியோ டால்ஸ்டாயைச் சந்தித்தார். பின்னர் பெர்லின் திரும்பியதும் ருசிய நாட்டு வரலாற்றையும், அந்நாட்டின் கலை இலக்கியங்களையும் விரும்பிப் பயின்றார். ரில்க், பிரான்ஸ், ஸ்காண்டி நேவியா, இத்தாலி, ஸ்பெயின், வடஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும், ருசியப்பயணம் அவர் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவருடைய எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாகவும் அடிப்படையாகவும் விளங்கியது; தான் தரிசித்த முதல் புனித பூமியாக அதைக் கருதினார். ருசியப் பயணத்தின் விளைவாகத் தோன்றிய கவிதைகளில் ருசிய நாட்டைத் தனது ஆன்மீகப் பெருவெளியாக அதிசயங்கள் மிக்க கற்பனை உலகமாக-வருணிக்கிறார். 1900-இல் அவர் எழுதி வெளியிட்ட ‘கடவுளின் கதைகள்’ (Stories of god) என்ற நூல் அவர் உள்ளத்தில் ஆட்சி செய்த கற்பனை ருசியாவை மிக உயர்வாக உருவகப்படுத்துகிறது.

1902-இல் புகழ்பெற்ற பிரெஞ்சுச் சிற்பியான ரோடினின் செயலாளராகச் சேர்ந்து இரண்டாண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் பாரிசில் பத்தாண்டுகள் தங்கியிருந்து தம் இலக்கியப் பணியைத் தொடர்ந்தார். 1915-ஆம் ஆண்டில் இராணுவப் பணிக்காக அழைக்கப்பட்டு வியன்னா சென்றார். இராணுவத்தின் கடுமையான நடைமுறைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நோய் வாய்ப்பட்டார். அவருடைய மோசமான உடல் நிலை காரணமாக இராணுவத்தில் அவருக்கு எழுத்தர் பணி வழங்கப்பட்டது. ஓரிரண்டு ஆண்டுகளில் அப்பணியிலிருந்தும் விடுதலைபெற்று ம்யூனிச் சென்று தங்கினார். தமது கடைசி நாட்களை ஸ்விட்சர்லாந்தில் கழித்தார்.

ஷெல்லியும் பைரனும் கவிஞர்களுள் மிகவும் அழகானவர்கள்; டபிள்யூ எச். ஆடன் கவிஞர்களுள் மிகவும் அழகற்றவர்: அளவற்ற குடியால் சீர்குலைந்து, தோல் சுருங்கி, ஒட்டுக் கந்தலாக அவர் முகம் காட்சியளிக்கும். ரில்க்கின் சமகாலத்து எழுத்தாளர் ஒருவர் ரில்க்கின் தோற்றத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது, 'அடிக்கடி மீசையைச் சுண்டும், சுண்டெலி போல் காட்சியளிக்கிறார், என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.

மீசையோடும், இனிய உறுதியான முகத்தோடும், மெவித்த தாடையோடும் எதிர்ப்பட்டதைக் கிரகிக்கும் ஒளி பொருந்திய