இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
புகழ் மாலை
பழங்காலச் சுவடி தேடும்
பணியிலே ஈடு பட்டு
விழுங்காலம் வரும்வ ரைக்கும்
வேதியர் தொண்டு செய்தார்.
செழுங்காந்தள் மலரைப் போன்று
சிவந்தவர் செய்த தொண்டோ
ஒழுங்கான தொண்டு; கல்வி
உலகமே போற்றும் தொண்டு.
நாமெலாம் பத்துப் பாட்டை
நன்னூலைப் பார்க்கின் றோமே
ஒமநா தைய ரோஅவ்
ஒலையை அச்சி லிட்டார்?
பூமிபோற் பொறுமை கொண்ட
புலவராம் இவரே இட்டார்.
சாமிநா தைய ரின்றேல்
சங்கநூல் மறைந் திருக்கும் !
ஆயிரம் பிறைகள் கண்டார்
ஆணிப்பொன் ஐயர். பெற்ற
தாயினும் சிறந்த தான
தமிழுக்கே தம்மை ஈந்தார்.
தூயநூற் சுவடி தந்த
தூயவர், பாடல் பெற்ற
கோயில்போ லானார், தஞ்சைக்
கோபுரக் கலச மானார்!