பக்கம்:புகழ்மாலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

புகழ் மாலை


பழங்காலச் சுவடி தேடும்
       பணியிலே ஈடு பட்டு
விழுங்காலம் வரும்வ ரைக்கும்
       வேதியர் தொண்டு செய்தார்.
செழுங்காந்தள் மலரைப் போன்று
       சிவந்தவர் செய்த தொண்டோ
ஒழுங்கான தொண்டு; கல்வி
       உலகமே போற்றும் தொண்டு.

நாமெலாம் பத்துப் பாட்டை
       நன்னூலைப் பார்க்கின் றோமே
ஒமநா தைய ரோஅவ்
       ஒலையை அச்சி லிட்டார்?
பூமிபோற் பொறுமை கொண்ட
       புலவராம் இவரே இட்டார்.
சாமிநா தைய ரின்றேல்
       சங்கநூல் மறைந் திருக்கும் !

ஆயிரம் பிறைகள் கண்டார்
       ஆணிப்பொன் ஐயர். பெற்ற
தாயினும் சிறந்த தான
       தமிழுக்கே தம்மை ஈந்தார்.
தூயநூற் சுவடி தந்த
       தூயவர், பாடல் பெற்ற
கோயில்போ லானார், தஞ்சைக்
       கோபுரக் கலச மானார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/10&oldid=1491637" இலிருந்து மீள்விக்கப்பட்டது