இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் சுரதா
7
உ.வ. சாமிநாதையர்
(1855 – 1942)
ஆதீநூல் அனைத்தும் கற்றே
ஆழ்ந்தசிந் தனையைப் பெற்றே
நீதிநூல் வழியில் வாழ்ந்து
நிலையான கீர்த்தி சேர்த்த
வேதநா தையர்; செய்யுள்
வித்தைநா தையர்; நல்ல
சாதுநா தையர் உ.வே.
சாமிநா தையர் ஆவார்.
ஒருசிலர் எல்லாம் செய்வர் .
செய்வதை ஒழுங்காய்ச் செய்யார்.
ஒருசிலர் ஒன்றே செய்வர்.
செய்யினும் ஒழுங்காய்ச் செய்வர்.
அரும்பெரும் செயல்கள் செய்யும்
ஆற்றலோர் சிலர்க்கே உண்டு.
திருவளர் ஐயர் செய்த
சேவையோ அரிய சேவை !