பக்கம்:புகழ்மாலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

7


உ.வ. சாமிநாதையர்

(1855 – 1942)

ஆதீநூல் அனைத்தும் கற்றே
       ஆழ்ந்தசிந் தனையைப் பெற்றே
நீதிநூல் வழியில் வாழ்ந்து
       நிலையான கீர்த்தி சேர்த்த
வேதநா தையர்; செய்யுள்
       வித்தைநா தையர்; நல்ல
சாதுநா தையர் உ.வே.
       சாமிநா தையர் ஆவார்.


ஒருசிலர் எல்லாம் செய்வர் .
       செய்வதை ஒழுங்காய்ச் செய்யார்.
ஒருசிலர் ஒன்றே செய்வர்.
       செய்யினும் ஒழுங்காய்ச் செய்வர்.
அரும்பெரும் செயல்கள் செய்யும்
       ஆற்றலோர் சிலர்க்கே உண்டு.
திருவளர் ஐயர் செய்த
       சேவையோ அரிய சேவை !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/9&oldid=1491636" இலிருந்து மீள்விக்கப்பட்டது