இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
புகழ் மாலை
வேதநாயகம் பிள்ளை
(1826 – 1889)
வேதனை நாயகர் வேடிக்கை நாயகர்
விண்கதை நாயகரோ - அவர்
சாதனை நாயகர் சாத்திர நாயகர்
தண்டமிழ் நாயகரே,!
சத்துசித் தானந்த தத்துவ நீதிநூற்
சாத்திரம் பாடியவர் - அவர்
புத்திசித் தானந்த போதனை கூறிய
புத்தக ஞானியவர்!
போற்றும் புதுமை புரிந்து சிறந்தவர்
பொய்யா மொழிப்பெரியார் - இளங்
கீற்று நிலாஒளி உள்ளம் வளர்த்த
கிறித்துவ பாரதியார்!