இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் சுரதா
5
உமறுப் புலவர்
(17ம் நூற்றாண்டு)
அமுதத் தமிழ்க் கலைஞர்
அழகு நடையறிஞர்
உமறுப் புலவரடீ - கண்ணம்மா
உவமைக் கவிஞரடீ !
சீறாப் புராண மதைத்
தீட்டிய செல்வரடி
மாறாப் புலவரடி - கண்ணம்மா
மற்றொரு கம்பரடீ !
செயற்கைப் புலவர்களின்
செய்யுள் பிழைப்பதில்லை !
இயற்கைப் புலவரடி - கண்ணம்மா
இறந்தும் சிறந்தாரடி