இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
புகழ் மாலை
சீதக்காதி
(17 ஆம் நூற்றாண்டு)
மனத்தையே மதிப்பார் உண்டு
மதத்தையே மதிப்பார் உண்டு
தனத்தையே மதிப்பார் உண்டு
தரணியில் சிலபேர் தங்கள்
இனத்தையே சிறந்த தாக
எண்ணுவர்; சீதக் காதி
அனைத்தையும் மதித்து வந்தார்!
அறிவையும் மதித்து வந்தார் !
படிப்பினில் இன்பம் கண்ட
படிக்காசுப் புலவர் போன்ற
வடித்தநூல் வல்லார்க் கெல்லாம்
வழங்கிய முஸ்ஸீம் வள்ளல்
கொடுப்பதில் குமண னாகிக்
கூர்மையில் அக்ப ராகி
அடுக்கிய உலகம் மூன்றாம்
அங்கெல்லாம் கீர்த்தி பெற்றார்.