பக்கம்:புகழ்மாலை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

புகழ் மாலை


சீதக்காதி

(17 ஆம் நூற்றாண்டு)

மனத்தையே மதிப்பார் உண்டு
      மதத்தையே மதிப்பார் உண்டு
தனத்தையே மதிப்பார் உண்டு
      தரணியில் சிலபேர் தங்கள்
இனத்தையே சிறந்த தாக
      எண்ணுவர்; சீதக் காதி
அனைத்தையும் மதித்து வந்தார்!
     அறிவையும் மதித்து வந்தார் !

படிப்பினில் இன்பம் கண்ட
     படிக்காசுப் புலவர் போன்ற
வடித்தநூல் வல்லார்க் கெல்லாம்
     வழங்கிய முஸ்ஸீம் வள்ளல்
கொடுப்பதில் குமண னாகிக்
     கூர்மையில் அக்ப ராகி
அடுக்கிய உலகம் மூன்றாம்
     அங்கெல்லாம் கீர்த்தி பெற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/6&oldid=1491443" இலிருந்து மீள்விக்கப்பட்டது