பக்கம்:புகழ்மாலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

9


பாஸ்கர சேதுபதி

(19 ஆம் நூற்றாண்டு)

(ஒயிற்கும்மி)


ஆற்றல் மிக்கவர் ஆட்சி புரிந்தவர்
       ஆஸ்திக நீதிபதி - அவரே
       பாஸ்கர சேதுபதி - புலவர்
போற்றுந்தொல் காப்பியப் புத்தகம் போன்றவர்
       போனபின் ஏதுகதி ?

நற்றமிழ் கற்றவர் நன்மை புரிந்தவர்
       நாதச் சுவையரசர் - இராம
       நாத புரத்தரசர் - கவிதைப்
பற்றினைப் பற்றாகப் பற்றியொப் பற்ற நூல்
       பாடிய பாட்டரசர்!

கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்தவர்
       கேள்வி நக்கீரரவர் - சிறந்த
       வாள்வினை வீரரவர் - இளையான்
பிள்ளை எனுங்கவி ராயரைப் போன்றவர்
       பேருப காரியவர் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/11&oldid=1491638" இலிருந்து மீள்விக்கப்பட்டது