இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் சுரதா
15
மறைமலை அடிகள்
(1876 – 1950)
பலவோசை நிறைந்த 'காடன்
பாடி' யிற் பிறந்த பிள்ளை
விலையோசை கேட்டுக் கேட்டு
வீணாகி வந்தோர் தம்மைக்
கலையோசை கேட்க வைத்துக்
கண்களைத் திறந்து விட்டார்
மலைபேசக் கண்டோ மில்லை
மறைமலை பேசக் கண்டோம்!
வேதத்தை 'மறைநூல்' என்றும்
விவாகத்தை 'மன்றம்' என்றும்
சாதத்தை 'வெண்சோ' றென்றும்
சபதத்தை 'ஆணை' என்றும்
மாதத்தைத் 'திங்கள்' என்றும்
மறைமலை 'நம்சொல்' லாக்கிச்
'சோதித்த பொன்னே' போலும்
தூயசெந் தமிழ்நூல் தந்தார்!