இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16
புகழ் மாலை
நம்மொழிப் புலமை யெல்லாம்
நடுத்தெருப் புலமை யாகும்
செம்மொழி பேசி வந்த
திருமறை மலையார் பெற்ற
மும்மொழிப் புலமை யன்றோ
முற்றிய புலமை அன்னார்
தும்மலும் கல்வித் தும்மல்
தூக்கமும் கல்வித் தூக்கம் !
மறைமலை கற்ற நூற்கள்
மற்றவர் கற்றாரேனும்
மறைமலை கண்ட நுட்பம்
மற்றவர் கண்ட தில்லை!
மறைமலை இயக்கம் நாட்டின்
வரலாற்றை வளர்க்கும் !நாக
மறைமலை சேர்த்த கீர்த்தி
வாடாத கீர்த்தி யாகும் !
முல்லைக்கோர் காடு போலும்
முத்துக்கோர் கடலே போலும்
சொல்லுக்கோர் கீரன் போலும்
தூதுக்கோர் தென்றல் போலும்
கல்விக்கோர் கம்பன் போலும்
கவிதைக்கோர் பரணர் போலும்
வில்லுக்கோர் ஓரி போலும்
விளங்கினார்! வென்றார்! நின்றார் !