இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் சுரதா
17
பாரதியார்
(1882 – 1921)
சாரமே அற்ற வெற்றுச்
சாத்திரம் கோத்து வந்த
பாரதி பலபேர். அன்னார்
படைப்பினை உடைப்பில் தள்ளி
வீரமாய் அருட்பா வைப்போல்
விளக்கமாய் வாழ்நாளெல்லாம்
பாடினார் சுப்ரமண்ய
பாரதி நாட்டுக் காக!
விண்தொடும் கீர்த்தி பெற்ற
வீரர்கள் வாழ்ந்த நாட்டில்
'தண்ணடை எருமை' போன்று
தமிழகர்கள் வாழக் கண்டு
கண்களில் ஈரம் காட்டிக்
கலங்கினார்; நிலைமை மாற்ற
'எண்ணினார்; புரட்சி செய்தார்;
எழுத்தினால் மேடைப் பேச்சால்!