பக்கம்:புகழ்மாலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

புகழ் மாலை


பொய்யராய்ச் சமுதா யத்தின்
     புரட்டராய் வாழ்வா ரெல்லாம்
"ஐயரா?" என்று கேட்டார்
     ஆவிபோம் வரையில் அன்னார்
மெய்யராய் வாழ்ந்தார். வாழ்வில்
     வீனராய்க் கேட்டு வாங்கும்
கையராய் வாழ்ந்தார்க் கெல்லாம்
     காலனாய்க் காட்சி தந்தார்!

எட்டைய புரத்தார் பாடல்
     இனிப்பிலே பழுத்த பாடல்
பட்டினப் பாலை என்னும்
     பாடல்போற் சிறந்த பாடல்
மெட்டோடு பரவும் பாடடல்
     மேனாடும் போற்றும் பாடல்.
ஒட்டிய இளமை போலே
     உணர்ச்சியைத் தூண்டும் பாடல்!

பாரதி நம்நூற் றாண்டின்
    பட்டினிப் புலவர். விர
பாரதி நீண்ட காலம்
    பாரினில் வாழ்ந்தா ரில்லை.
பாரதி தோற்றா ரில்லை,
    பாடலால் பிழைத்தா ரில்லை.
பாரதி முற்றுப் பெற்றார்
   பாடலால் 'உலகம்' பெற்றார் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/20&oldid=1491662" இலிருந்து மீள்விக்கப்பட்டது