இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் சுரதா
19
திரு.வி.க.
(1883 – 1951)
எழுத்தினால் இனிய பேச்சால்
இடைவிடாத் தூய தொண்டால்
பழுத்தபே ரறிவால் கல்விப்
பார்வையால் நட்பால் நாட்டை
இழுத்தவர்; என்தாய் போலே
இளைத்தவர்; கீர்த்தி சேர்த்துச்
செழித்தவர்; விழித்த தென்றல்
திரு.வி.க. என்னும் மேதை!
அன்புக்குத் தூதர்; நீதி
ஒளவையார்; மெல்லி னத்தின்
முன்னிற்கும் வல்லி னம்போல்
முன்னின்ற தலைவர்! நாட்டின்
நன்மைக்குப் பாடு பட்ட
நாவலர்! தலைமை தாங்கும்
கன்னிசெந் தமிழைக் காத்த
காவலர்! கல்விச் செல்வர்.