பக்கம்:புகழ்மாலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

19


திரு.வி.க.

(1883 – 1951)

எழுத்தினால் இனிய பேச்சால்
     இடைவிடாத் தூய தொண்டால்
பழுத்தபே ரறிவால் கல்விப்
     பார்வையால் நட்பால் நாட்டை
இழுத்தவர்; என்தாய் போலே
    இளைத்தவர்; கீர்த்தி சேர்த்துச்
செழித்தவர்; விழித்த தென்றல்
   திரு.வி.க. என்னும் மேதை!

அன்புக்குத் தூதர்; நீதி
     ஒளவையார்; மெல்லி னத்தின்
முன்னிற்கும் வல்லி னம்போல்
    முன்னின்ற தலைவர்! நாட்டின்
நன்மைக்குப் பாடு பட்ட
    நாவலர்! தலைமை தாங்கும்
கன்னிசெந் தமிழைக் காத்த
    காவலர்! கல்விச் செல்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/21&oldid=1491663" இலிருந்து மீள்விக்கப்பட்டது