இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24
புகழ் மாலை
சிந்துக்குத் தந்தை
பாட்டுப் படையலினால் - புதுப்
பாதையைக் காட்டியவன்;
சீ்ட்டுக் கவிதையினால் - சில
செய்திகள் சொல்லியவன்;
பூட்டுக் கவிதைகளை - வியப்
பூட்டிடப் பாடியவன்;
வேட்டை அரசனைப்போல் - அவன்
வென்று விளங்கியவன்
தந்தைக்குக் கால்களவன் - பெற்ற
தாய்க்கிரு கண்களவன்;
பந்துக்குக் கைகளவன் - பெண்கள்
பார்வைக்குக் காமனவன்.
அந்திக்குத் தென்றலவன் - வைகை
ஆற்றுக்குப் பாலமவன்;
சிந்துக்குத் தந்தையவன் - செய்யுள்
சிங்கத்தின் சிங்கமவன்.