பக்கம்:புகழ்மாலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

25


மன்னவன் பேரவையில் – கவி
       மாலை தொடுத்தவனாம்;
கன்னியர் மார்பினிலே - தினம்
       கண்ணைப் பதித்தவனாம் ;
தென்னவன் அன்னவனாம் - சதைச்
       சேற்றில் விழுந்தவனாம் ;
அன்னவன் பொற்கட்டியாம் - அவன்
       அண்ணா மலைரெட்டியாம்.

வாசல் நிலவுகளாம் - நய
       வஞ்சக வஞ்சியரின்
ஓசை உதடுகளில் - அவன்
       ஒத்திகை பார்த்துவந்தான்.
ஆசை அரங்கத்திலே - எழில்
       அங்கச் சுரங்கத்திலே
பூசை புரிவதுதான் - பெரும்
       புண்ணியம் என்றிருந்தான்.

யாப்பு முறையறிந்தோன் - அரை
       யாப்பெனும் நோய்வழக்கின்
தீர்ப்பில் தளர்ந்துவிட்டான் - உடல்
       தேய்ந்து மெலிந்துவிட்டான்!
காப்புக் கவியரசன் - நெடுங்
       காலம் உயிர்வாழும்
வாய்ப்பை இழந்துவிட்டான் - பிணி
       வந்து மடிந்து விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/27&oldid=1491668" இலிருந்து மீள்விக்கப்பட்டது