கவிஞர் சுரதா
25
மன்னவன் பேரவையில் – கவி
மாலை தொடுத்தவனாம்;
கன்னியர் மார்பினிலே – தினம்
கண்ணைப் பதித்தவனாம்;
தென்னவன் அன்னவனாம் – சதைச்
சேற்றில் விழுந்தவனாம்;
அன்னவன் பொற்கட்டியாம் – அவன்
அண்ணா மலைரெட்டியாம்.
வாசல் நிலவுகளாம் – நய
வஞ்சக வஞ்சியரின்
ஓசை உதடுகளில் – அவன்
ஒத்திகை பார்த்துவந்தான்.
ஆசை அரங்கத்திலே – எழில்
அங்கச் சுரங்கத்திலே
பூசை புரிவதுதான் – பெரும்
புண்ணியம் என்றிருந்தான்.
யாப்பு முறையறிந்தோன் – அரை
யாப்பெனும் நோய்வழக்கின்
தீர்ப்பில் தளர்ந்துவிட்டான் – உடல்
தேய்ந்து மெலிந்துவிட்டான் !
காப்புக் கவியரசன் – நெடுங்
காலம் உயிர்வாழும்
வாய்ப்பை இழந்துவிட்டான் – பிணி
வந்து மடிந்து விட்டான்.