உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

புகழ் மாலை


அள்ளும் அழகுடையோன் – அவன்
             அங்கம் அழிந்திடினும்
தெள்ளு தமிழ்க்குதவும் – அவன்
             சிந்துகள் வாழ்ந்திருக்கும் !
கொள்ளி அணைவதுண்டு – நிறம்
             கொண்ட மயிலிறகின்
புள்ளி அழிவதுண்டோ ? – குளிர்
             பூம்புனல் வெள்ளத்தினாால்.

மண்ணில் நெடுங்காலம் – அந்த
              மகாகவி வாழ்ந்திருந்தால்
பண்ணைப் பயிர்போலே – சந்தப்
              பாடல் வளர்த்திருப்பான்.
கண்ணுக் கினியகவி – இன்ப
              காவியம் தந்திருப்பான்
வண்ணக் குருத்தோலை – கத்தி
              வாய்ப்பட் டழிந்ததுவே.

கழுகு மலைவளத்தைக் கதிர்
              காட்டும் திணைப்புனத்தை
ஒழுகும் அருவியினை – எழில்
              ஓவியக் காட்சியினைப்
பழகும் தமிழ்மொழியில் – அவன்
              பாடி இருப்பதுபோல்
அழகு நயத்தோடு – பிறர்
             ஆக்கல் எளிதல்லவே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/28&oldid=1871720" இலிருந்து மீள்விக்கப்பட்டது