இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28
புகழ் மாலை
அள்ளும் அழகுடையோன் - அவன்
அங்கம் அழிந்திடினும்
தெள்ளு தமிழ்க்குதவும் - அவன்
சிந்துகள் வாழ்ந்திருக்கும்!
கொள்ளி அணைவதுண்டு - நிறம்
கொண்ட மயிலிறகின்
புள்ளி அழிவதுண்டோ ? - குளிர்
பூம்புனல் வெள்ளத்தினாால்.
மண்ணில் நெடுங்காலம் - அந்த
மகாகவி வாழ்ந்திருந்தால்
பண்ணைப் பயிர்போலே - சந்தப்
பாடல் வளர்த்திருப்பான்.
கண்ணுக் கினியகவி - இன்ப
காவியம் தந்திருப்பான்
வண்ணக் குருத்தோலை - கத்தி
வாய்ப்பட் டழிந்ததுவே.
கழுகு மலைவளத்தைக் கதிர்
காட்டும் திணைப்புனத்தை
ஒழுகும் அருவியினை - எழில்
ஒவியக் காட்சியினைப்
பழகும் தமிழ்மொழியில் - அவன்
பாடி இருப்பதுபோல்
அழகு நயத்தோடு - பிறர்
ஆக்கல் எளிதல்லவே!