பக்கம்:புகழ்மாலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

புகழ் மாலை


அள்ளும் அழகுடையோன் - அவன்
       அங்கம் அழிந்திடினும்
தெள்ளு தமிழ்க்குதவும் - அவன்
       சிந்துகள் வாழ்ந்திருக்கும்!
கொள்ளி அணைவதுண்டு - நிறம்
       கொண்ட மயிலிறகின்
புள்ளி அழிவதுண்டோ ? - குளிர்
       பூம்புனல் வெள்ளத்தினாால்.

மண்ணில் நெடுங்காலம் - அந்த
       மகாகவி வாழ்ந்திருந்தால்
பண்ணைப் பயிர்போலே - சந்தப்
       பாடல் வளர்த்திருப்பான்.
கண்ணுக் கினியகவி - இன்ப
       காவியம் தந்திருப்பான்
வண்ணக் குருத்தோலை - கத்தி
       வாய்ப்பட் டழிந்ததுவே.

கழுகு மலைவளத்தைக் கதிர்
       காட்டும் திணைப்புனத்தை
ஒழுகும் அருவியினை - எழில்
       ஒவியக் காட்சியினைப்
பழகும் தமிழ்மொழியில் - அவன்
       பாடி இருப்பதுபோல்
அழகு நயத்தோடு - பிறர்
      ஆக்கல் எளிதல்லவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/28&oldid=1491670" இலிருந்து மீள்விக்கப்பட்டது