பக்கம்:புகழ்மாலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

33


கூம்பலும் சோம்பலும் கூடாதென்றார் - வெறும்
       கூச்சலில் வண்டியும் ஒடாதென்றார்
சாம்பல் எரியுமோ மீண்டுமென்றார் - புதுச்
      சாதனை அல்லவோ வேண்டுமென்றார்.

இந்தியா சிறந்த தேசம்
        இல்லையா? என்று கேட்பர்;
இந்திய நாட்டில் ஏழ்மை
        இல்லையா? என்று கேட்பேன்.
இந்தியா வாழ வேண்டும்;
        இரணியன் இறந்த நேரம்
அந்தியா? பகலா? என்னும்?
       ஆராய்ச்சி இன்றா தேவை?

இல்லையே என்று மக்கள்
       ஏங்குதல்; எங்கள் வாழ்வு
தொல்லையே துயரே என்று
       சொல்லுதல்; சிலர்நம் நாட்டில்
கொல்லைப்பூ வாசம் வீசக்
      கூடத்தில் ஊஞ்ச லாடல்
நல்லதா? இந்தப் போக்கு
      நாட்டுக்குத் தேவை தானா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/35&oldid=1491649" இலிருந்து மீள்விக்கப்பட்டது