இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் சுரதா
33
கூம்பலும் சோம்பலும் கூடாதென்றார் - வெறும்
கூச்சலில் வண்டியும் ஒடாதென்றார்
சாம்பல் எரியுமோ மீண்டுமென்றார் - புதுச்
சாதனை அல்லவோ வேண்டுமென்றார்.
இந்தியா சிறந்த தேசம்
இல்லையா? என்று கேட்பர்;
இந்திய நாட்டில் ஏழ்மை
இல்லையா? என்று கேட்பேன்.
இந்தியா வாழ வேண்டும்;
இரணியன் இறந்த நேரம்
அந்தியா? பகலா? என்னும்?
ஆராய்ச்சி இன்றா தேவை?
இல்லையே என்று மக்கள்
ஏங்குதல்; எங்கள் வாழ்வு
தொல்லையே துயரே என்று
சொல்லுதல்; சிலர்நம் நாட்டில்
கொல்லைப்பூ வாசம் வீசக்
கூடத்தில் ஊஞ்ச லாடல்
நல்லதா? இந்தப் போக்கு
நாட்டுக்குத் தேவை தானா?