இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் சுரதா
35
நாகரி கத்தின்வ ரம்பனார்;
நாலுதி சைக்கும்வ ரம்பானார்;
ஈகைய ளிப்பதில் கண்ணானார்;
எல்லைவ குப்பதில் கண்ணானார்.
பாகமெ னெச்சம நேரானார்;
பண்பில்ப முத்தவர் நேரானார்;
தாகந்த விர்ப்பத்தில் நீரானார்;
தம்முடல் வெந்தவர் நீறானார்!
பாரினில் மேருவும் இன்றில்லை;
பஃறுளி யாறும்இன்றில்லை;
தாருவில் கற்பகம் இன்றில்லை;
சகோட யாழும் இன்றில்லை;
கோரிய செந்தமிழ்க் காப்பியமாம்
குண்டல கேசியும் இன்றில்லை.
ஓரியும் பாரியும் இன்றில்லை;
உத்தமர் நேருவும் இன்றில்லை!