இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38
புகழ் மாலை
புத்தர்
சித்திர அழகன்! ஆழ்ந்த
சிந்தினைச் சிற்பி காதல்
தித்திப்புச் சுவைத்தோன். வேதச்
சேதியை எதிர்த்த மன்னன்.
கத்தியைத் தூங்க வைக்கும்
கருத்தினைப் பிரித்துத் தந்தோன்
தத்துவ ஞானி, அன்புச்
சரித்திரம் பெற்று விட்டோன்.