இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் சுரதா
39
உலகம் போற்றும் உத்தமர்
இல்லற ஞானி. சொந்த
இதயத்தில் இருட்டு இல்லான்
நல்லவன், நாட்டுக் காக
நாடொறும் உழைத்தோன். பாரில்
செல்வமில் லாத செல்வன்.
செயற்கையால் இறந்து பட்டோன்.
புல்லுக்கும் கருணை காட்டிப்,
புகழ்பெற்ற புத்தன் போன்றோன்!