இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
புகழ் மாலை
பாரதி!
உத்தர மேரூர்க்குப் பக்கத்தில் உள்ள
திருவதிகைக் கோயில் தெய்வத்தின் மீது.
கனிந்த செந்தமிழ்க் கலம்பகம் ஒன்று
பாடியவர் உத்தண்ட வேலாயுத பாரதி.
திருவிளை யாடல் நாடகம் செய்து
கீர்த்தி சேர்த்தவர் கிருட்டின பாரதி
படித்தால் பயன்தரக் கூடிய பல்பொருட்
சூடா மணிநிகண் டென்னும் சுவடியை
இயற்றித் தந்தவர் ஈசுர பாரதி.
முயன்று முயன்றுதம் முதுமைப் பருவத்தில்
ஆத்தி சூடி வெண்பாவை அளித்தவர்
இயற்றமிழ்ப் புலவர் இராம பாரதி
விருத்தங் ளாலே விசுவ புராணம்
தந்தவர் முத்துச் சாமி பாரதி