பக்கம்:புகழ்மாலை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

45


கொங்கு நாட்டின் கொள்கை வீரன்


வெட்டொன்று துண்டொன்று என்று பேசும்
       வெடிக்குரலோன் அழகிரிபோல்; முடிவு தன்னைத்
திட்டவட்ட மாய்க்கூறும் துணிவு பெற்ற
       சிங்கார மணிப்பிள்ளை பழைய கோட்டை
பட்டயகா ரர் திலகம் அழியாக் கீர்த்திப்
       பரம்பரையி லேவந்த கொள்கை வீரன்.
வெட்டுகின்ற வாள் தன்னை எடுத்து ஏந்தும்
      வேந்தர்களின் மலைநாடு தந்த மைந்தன்.

கண்ணுக்கு இமை போன்று இருந்தோன். கட்சிக்
      கருத்துக்குக் குறள் போன்று இருந்தோன். நீல
விண்ணுக்கு மழைபோன்று இருந்தோன். ஆனால்
     விழலுக்கு நீர்போல இருந்த தில்லை!
எண்ணத்தி லேதெளிவை, சீர்திருத்த
    இயக்கத்திலே கருத்தைப் பதிய வைத்த,
கண்ணழகன், அர்ச்சுனனை எண்ணும் போதுக்
   கருங்கடலைத் தான் விழியில் காணுகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/47&oldid=1491620" இலிருந்து மீள்விக்கப்பட்டது