இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46
புகழ் மாலை
பெருமீசை வைத்திருந்த பன்னீர்ச் செல்வப்
பெருந்தகையார் தனையிழந்து ஏங்கும் போது,
அரும்பைப்போல் சிறுமீசை வைத்த இன்னோன்
அரியதுணை யாயிருப்பான் என்று எண்ணிப்,
பெருங்கனவு நாம்கண்டு வந்தோம். கண்ட
பெருங்கனவை நிறைவேற்றும் செம்மல் தன்னை;
மரணமெனும் உயிர்பிரிக்கும் சக்தி வீழ்த்த;
மாணிக்கம் போன்றவனை இழந்து விட்டோம்!
மலரிருந்தால் மணம்வீகம்; மதுவை நல்கும்.
மறுபடியும் காயாகும்; கனியும்; இந்த
நிலையாவும் நிகழ்தற்குக் கொடியில், அப்பூ
நிச்சயமாய் நிலைத்திருத்தல் வேண்டும். ஆனால்
கலை அழகன் தான் இருபத் திரண்டி லேயே
கண்மூடி விட்டானே என்ன செய்வோம்!
குலைத்தெங்கு வீழ்ந்ததென வீழ்ந்திடாமல்,
கொள்கைதனை இவன்போன்று செழிக்கச் செய்வோம்