I 6 புகழ் மாலை
சீகரமார் இயல்புடையான், மெய்ஞ்ஞானத்
துறவுடையான், சேர்வார் தங்கள்
பாகம் நின்றே நலம்செய்வான், ராமசுரத்
குமாரென்னும் பண்பன் தானே. 55
பாயிருக்கும்; அதன்மேலே அமர்ந்திருப்பான்;
அவனருகே பலர் வந் தேய்ந்தே . நோயிருக்கும் மன்மடக்க முயல்கின்ருர்,
என்ருலும் நுட்ப மாகத் - . தாயிருக்கும் அன்பினையே எவர் கண்டார்?.
அவரெல்லாம் சார் வார். நன்மை. வாயிருக்கும் இன்சொல்லான் ராமசுரத்
குமாரென்னும் மாத வத்தோன். 56
(தரவு கொச்சகக் கலிப்பா)
கருத்துான்றி நினைப்பதற்கே கால மில்லை, வேலைபல பெருத்தோங்கி வாழ்வெல்லாம் பெருமைபடப் பேசுகின்றீர்; திருத்தோன்றல் ராம சுரத் குமாரென்னும் தேவனுடை உருத்தோன்றக் கண்டுவிட்டால் உளேஉள்ளம் அடங்குமரோ 57
எந்நாளும் வாழ்வதற்கே இச்சைகொண்டீர் என்ருலும் பன்னளும் வாழ்வதற்குக் காலன்தான் விடமாட்டான்; இந்நாள்போல் எந்நாளும் இருந்திடலாம் என எண்ணி இன்னத பேசாமல் எய்து மிங்கே, அருள் கிடைக்கும். 58
திருவண்ணு மலேயுள்ள தேசுபெறும் மூர்த்தியெலாம் உருவண்ணி இங்கொன்ருய் உற்றதுபோல் இருக்கின்றன்: மருவண்ண நின்றதொரு மாலையான் எம்முடைய முருகன்போல் ராமசுரத் குமார் என்னும் முனியரசன். 59