புகழ் மாலை
2
2
புகழ் மாலை
ஒமென்னும் எழுத்துக்குள் ஒருபொருளாய் நுட்பமாம் ஒன்றை உன்னி - நாமென்றும் காணுதற்கு வலியில்லேம்:
என்ருலும் நடலை நீக்கி ஆமென்று சொல்வதற்கோர் ஞானியுளான் அவன்தான் அண் ணுமலைக்கண் - சேமமுறும் ராமசுரத் குமாரனெனும் திருப்பெயர்கொள் சிறந்த ஞானி,
கண்டாலும் கேட்டாலும் கண்டறியார் மிகவிரிந்த காசி னிக்கண் - விண்டாலும் தேறறியார் அவர்கண்டால்
வியப்புள்ளே வீழ்ந்து மூழ்கிச் சண்டாளத் தகைமையெல்லாம் போகநின்று.
சாந்தநிலை சார்வார் அன்ருே? விண்டாரால் அறியலுறும் ராமசுரத்
குமார்செய்யும் வித்தை இஃதே.
வந்தார்க்குத் தாய்போலப் பால்தருவான்.
பழம் தருவான்; மனம் அ டக்கக் கந்தாகும் விரகென்னும் அன்பினையே
சொல்கின்ருன்; காதல் செய்மின்; எந்தாயாய் எந்தையாய்க் குருவாகித் தெய்வமாய் இருக்கும் அப்பன், கந்தாடும் பொருளறிந்த ராமசுரத்
குமாரென்னும் கவிஞர் யோகி.
நாடாத நாட்டமெல்லாம் நாடுகின்றீர்;
எந்நாளும் ஞாலம் தன்னில் - ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகின்றீர்;
அதேைல அமைதி உண்டோ?