இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2. சின்னவளும், பெரியவளும்
தி தி
ணைக்காதே! விளக்கை அணைக்காதே!’ - அடித் தொண்டையில் அலறினாள் வள்ளி. அதில் மேலோங்கி ஒலித்தது அச்சம்.
‘ஏன்? ஏன் அணைக்கப்படாது?’ என்று கத்தினார் பெரியவர்: ஐந்து வயது வள்ளியின் தாத்தா அவர்.
‘பயமாயிருக்கு’
“என்னட்டி பயம்?’’
- w * . .
இருட்டைக் கண்டாலே எனக்கு பயம்தான். நீ விளக்கை அணைக்காதேயின்னா அணையாமல் இரேன்! இப்ப எதுக்கு விளக்கை அணைக்கப் போறே?’ என்று வாதாடினாள் அவள். -
‘விளக்கு எரிஞ்சா தூக்கம் வராது. அதுக்குத்தான்.”
பெரிதாக எரிந்து கொண்டிருந்த அரிக்கன் விளக்கின் திரியை உள்ளுக்குள் இறக்கிச் சுருக்குவதற்காக அவர் கையை நீட்டினார்.
அவள் அலறினாள்: “அணைக்காதே ஐயோ, அணைக் காதேயேன்: ‘ -