பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 89

கொண்டிருந்தது. அவர்கள் கண்கள் எதெதையோ வியந்து ரசித்துக் களிப்புற்று நீந்தின.

சிதம்பரம், ஒரு மூலையில் ஆனந்த உருவங்களாய் அமர்ந்து, தீனி இன்பத்தையும், இனிய உளறல்களையும் ரசித்துச் சுவைத்துக் கொண்டிருந்த காதல் ஜோடி ஒன்றை அடிக்கடி பார்த்து, உள்ளத்தில் பொறுமினான்: இந்தத் தடிப்ப சங்களோடு வீண்பொழுது போக்க நேர்ந்து விட்டது. இல் லாவிட்டால், லலிதாவோடு ஏதாவது படம் பார்க்கப் போயிருக்கலாம். படத்துக்கு இல்லையென்றாலும், சும்மா பீச் பக்கம் போயிருக்கலாம். ரொம்ப ஜாலியாக இருந் திருக்கும்!”

சாமிநாதன், சற்று தள்ளி ஒரு மேஜையில், நான்கு பேர் களாக இருந்தும் பெரும் கும் பல் மாதிரிக் கலகலப்பு உண்டாக்கி, அர்த்தமில்லாமல் சிரித்து, குஷியாகக் காட்சி தந்த யுவதிகளைப் பார்த்து விட்டு, நாம் இப்படிச்சேர்ந்திருப்ப தைவிட, அவர்களைப் போல் அலங்காரிகள் சிலரையும் சேர்த்துக் கொண்டு டின்னருக்கு ஏற்பாடு பண்ணியிருக்க வேண்டும். அப்போது இந்த விருந்தின் சுவையும் இன்பமும் அதிகரித்திருக்கும் என்று அபிப்பிராயம் அறிவித்தான்.

அதை ஆரவாரமாக வரவேற்ற சந்திரன் அடுத்த தடவை அப்படியே அரேன்ஜ் செய்தால் போச்சு!” என்று சொல்லி வைத்தான். அவன் மனம் அவன் வேலை செய்யும் கம்பெனியில் பணிபுரியும் புஷ் பா, சாந்தா, கோகிலா வகையராவை எண்ணத் தொடங்கியது. ஐந்து பேர்களே வேண்டும் என்பதில்லை. சும்மா பேசிச் சிரித்துப்பொழுது போக்கத்தானே. மூன்று பேரே போதும். பெரும் கூட்டம் கூட்டுவானேன்? நம்ம அஞ்சு பேரிலே ஒன்றிரண்டு பேரை கட் பண்ணி விட்டலாம். இந்த உம்மணர் மூஞ்சி சோமுப் பயல் அது மாதிரி விருந்துகளுக்கு லாயக்கே இல்லை.