பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் எது? இவ்வுலகில் மக்களினம் விழைவ தெல்லாம் இன்பமெனும் ஒன்றன்றி மற்றொன்றில்லை; 左 எவ்வுயிரும் இன்பினைத்தான் தேடித் தேடி இளைத்தலுக்கக் காண்கின்றோம் துன்பம் என்iால் 9) ஒவ்வுவதிங் கொன்றில்லை; முனிவர் தாமும் ஒய்வின்றித் தவங்கிடந்து முயல்வ தெல்லாம். அவ்வுலக இன்பத்தைப் பெறுதற் கென்றால் அதன்பெருமை சொலற் கெளிதோ? ೨೦| யன்றோ? / + உலகியலின் உண்மைநிலை உணரா மாந்தர் ஒப்பரிய இன்பந்தான் வாழ்க்கை என்பர்; விலகரிய துன்பமுடன் கலந்த தைத்தான் வியனுலக வாழ்க்கைஎனச் சான்றோர் சொல்வர்; நிலவிவரும் இடரனைத்தும் நின்ற தாங்கி நிலை கலங்கா நெஞ்சுரத்தால் முயன்று, வெற்றி குலவிவர வாழ்வது தான் இன்ப மாகும் குறள் தந்த பெருமைமிகு நெறியும் ஆகும்.