பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_* புதியதொரு விதி செய்வோம் <102 கவியரசர் முடியரசன் மலருமெழில் வண்ணமலர் கண்ணுக் கின்பம்; மருவிவரும் தென்றல்நலம் உடலுக் கின்பம்; பல மலருள் விரிந்தமணம் மூக்கிற் கின்பம்; பாடிவரும் வண்டொலியோ காதுக் கின்பம்; நலமருவும் நறுங்கனிகள் நாவிற் கின்பம்; நானிலத்துத் தோன்றுபொருள் அனைத்து மிங்குப் புலனைந்தும் நுகரவரும் இன்ப மன்றோ? i. பொருந்துசுவை துகருங்கால் அளவு வேண்டும் இரவுபகல் எனநோக்கா துழைத்துச் செல்வம் ஈட்டிமிகத் தொகுப்பதிலே இன்பங் காண்பர்; வரவுவரும் தொகைபலவாய் மிகுதல் கண்டு வகுத்ததனை ஈவதிலே இன்பங்காண்பர்; கரவுமனங் கொண்டொன்றும் நுகரா தெண்ணிக் கணக்கிட்டே பொழுதெல்லாம் இன்பங் காண்பர்; உரமுடைய நன்மனத்தர் ஈந்து நின்றே உறுவறுமைத் துயர்வரினும் இன்பங் காண்பர்; அளிப்பதிலே சிலர்க்கின்பம்; மற்றோர் வாழ்வை அழிப்பதிலே சிலர்க்கின்பம்; நாடுவாழ உழைப்பதிலே சிலர்க்கின்பம்; வஞ்ச கத்தால் ஊரவர்தம் உழைப்பாலே உடல்வ ளர்த்துப் பிழைப்பதிலே சிலர்க்கின்பம்; பொய்ம்மை பேசிப் பிறர்நலத்தில் அழுக்குற்றுப் புறுமுங் கூறிச் செழிப்பதிலே சிலர்க்கின்பம்; வறுமைப் போதும் - செம்மைநெறி குன்றாமை சிலருக் கின்பம்