பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதிசெய்வோம் விழிசிவப்பா தணல்சிவப்பா என்று நம்மை வியப்புறுத்தும் உலைக்களத்தில் பற்றும் செந்தீ குழிவயிற்றின் பசிக்கனல்போல் எரிய அங்கே கொல்லனவன் உலைத்துருத்தி ஊதுங் காற்று தொழில்புரிவோன் பெருமூச்சுப் போல வீசத் தாக்கிவந்த வல்லிரும்பை நெகிழக் காய்ச்சி - எழிலுறவே சம்மட்டி கொண்டு தாக்கி - * எண்ணியவா றுருவுபெற ஆக்கி வைத்தான். உடலுயிரைப் பொருளாகக் கருதாதிந்த உலகத்தை உருவாக்க முயன்ற தோள்கள் கொடுமைகளை மிடிமைகளை வறுமை தந்த கோணல்களை எத்தனைநாள் சுமக்கும்? மேலும் அடிமையெனப் படிகளென ஆக்கி வைத்தால் - * -- அத்தனையும் எத்தனைநாள் உளம்பொ றுக்கும்? இடியெனவே முழங்காதோ அந்த வள்ளம்: என்றேனும் நிமிராவோ அந்தத் தோள்கள்?