பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்பத் துடிப்பு விரல்துடித்தால் யாழ்நரம்பில் இசையைக் கூட்டும்; விறலியரின் கால்துடித்தால் நடனங் காட்டும் si திறல்படைத்த சிற்பியின்கை உளிது டித்தால் தேவரையுங் கல்லுக்குள் அடக்கிக் காட்டும்; அருள்பழுத்த கலைஞன்றன் மனந்து டித்தால் அரியகலை பலகாட்டும்; சிந்தித் தாயும் திறல்படைத்த சிந்தனையார் மனந்து டித்தால் சீர்மைமிகும் புத்துலகைப் படைத்துக் காட்டும். கற்பனையில் உலவுகவி மனத்து டிப்பால் கனவுலகம் உருவாகும்; இல்ல றத்தைக் கற்கவரும் காதலர்கள் மனத்து டிப்பால் == கருவுலகம் உருவாகும்; பள்ளி சென்று கற்பவரின் அளவில்லர் மனத்து டிப்பால் கலகங்கள் உருவாகும்; ஒழுக்கக் குன்றில் நிற்பவர்தம் மனத்துடிப்பால் நலங்கள் எல்லாம் நிலமெங்கும் உருவர்கும் தீமை தேயும்.