பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் $45- கவியரசர் முடியரசன் நீசரை எதிர்த்திட நிமிர்த்திடு தோள்கள்; சென்ற களமெலாம் வ்ென்றது நின்னினம் இன்றதை மறந்தனை இனியதை நினைந்தெழு! நின்பாற் சோர்வு நேர்ந்துள தறிவேன்; அன்பநின் சோர்வுக் கடிப்படை தெரிவேன்; அதனாற் சோர்வுறல் அழகோ? உன்பணி எதனால் மறந்தனை? எவர்க்கது தீமை? நடந்ததை மறந்திடு நடப்பதை நினைந்தெழு தொடர்ந்துன் பணியைத் தொடங்கிடு நடந்திடு சிந்ல்துசெய்நீ செங்கதிர் வழியில் , ச11. வந்தனை நீயோ வாடிக் கிடப்பது? பெரியார் அறிஞர் பேணிய பாசறை உரியாய் நீயோ உறங்கிக் கிடப்பது? முறைப்படி ஆண்டநின் முத்தமிழ் நாட்டைச் சிறைப்பட விடாமல் சிறுத்தையே விழித்தெழு! வரிப்புலிப் போந்தே வரிந்து கட்டிநில்! நரிச்செயல் குறுக்கிடின் மிதித்ததை நசுக்கிடு! நாட்டில் தமிழ்மகன் நல்லதோர் ஆட்சியை நாட்டிடத் துணைநில்! நாளெல்லாம் மங்கலப் பொங்கலில் வஞ்சினம் பூண்டெழு! சிங்க மகனே சினந்தெழு வுடனே! (24.12.74)