பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழின வரலாறு கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ஊராக்கி ஒங்கும் நகராக்கி நாடென்ற பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்; - | P. மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சிநெய்தல் # 三/ நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தனவன்; கோட்டைச் சுவரெடுத்துக் கூடும் படையமைத்து நாட்டைப் புரந்து நலந்தந்தான் நாளும் குடிபழி தூற்றாது கோலோச்சி நல்ல படியரசு செய்து பயன்தந்து பேர்கொண்டான்; மாந்தர் உயிரானால் வேந்தர் உடலாவான் வேந்தன் உயிரானால் மாந்தர் உடலாவார்; ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான் முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள் எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற் பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால் கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான்; காட்டைத் திருத்திக் கழனி எனவாக்கி மேட்டைச் சமமாக்கி வேளாண் தொழில் புரிந்தான்;