பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் ைே கவியரசர் முடியரசன் 8| w| வால்பிடித்துக் கால்பிடித்து வாழ்வு நடத்துதற்கு வேல்பிடித்த மைந்தன் விரைவாக முந்துகின்றான்; தன்னிலையிற் றாழ்ந்தும் தனதுயிரைக் காப்பதற்குப் பின்னடைய வில்லை பெரும்பேதை ஆகிவிட்டான், பண்பாடு மூலையிற்போய் பாயை விரித்துவைத்துக் கண்பாடு கொள்கின்ற காலம் இதுவன்றோ? எங்கே உனதுமறை? எங்கே உனது நெறி? எங்கே உனநிறைவன்? என்றால் விழிக்கின்றான்; இங்கே புகுந்தமறை இங்கே புகுந்திநெறி 怡下 .இங்கே புகுந்த இறை என்பன்வற்றைக் காட்டுகிறான் - அந்தோ தமிழினத்தான் தன்னை யறியாது நொந்தே கிடக்கின்றான் நோயிற் படுக்கின்றான்; சொந்தமெது வந்ததெது சொல்ல வகையறியான் வெந்ததைத் தின்று வெறுமனே சாகின்றான்; விண்முட்ட வாழ்ந்து வியந்த வரலாறு மண்முட்டச் சாய்ந்து மடிவதோ? பீடுடுத்து வாழ்ந்த வரலாறு வீழ்ந்து மறைவதோ? தாழ்ந்து கெடுதல் தகுமோ?எனவெழுந்து பண்டை வரலாற்றைப் பாரில் நிலைநிறுத்தி மண்டும் புகழ்சேர்க்க வந்தோர் சிலராவர்; தாளாண்மை கொண்டு தளராது பாடுபட்ட வேளாண்மை நெஞ்சர் விதைத்த உணர்வுகளை நெஞ்சமெனும் நன்செய்யில் நேர்த்தி பெறவிளைத்து விஞ்சுபiன் கொள்க விழைந்து. -- -(பாரி' விழா, பறம்பு மலை) (27.4.1980) - 1. T. o * -o