பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் 2ே. கவியரசர் முடியரசன் அரங்கேறும் மொழியாளர் பொழிவார்கள் சொல்லை ஆனாலும் அவர்வாழ்வில் தொடர்பேதும் இல்லை நிறமாறும் பச்சோந்தி மரபாளர் சொல்லில் நினைகின்ற பயனேதும் விளைவாவ தில்லை -அயில் அயலாரும் துணிவோடு சதிராடு கின்றார் அறிவாளர் திறம்யாவும் விழலாக நின்றார் மயலோட மதிவாழ ஒருநாளும் எண்ணார் வழியேதும் தெரியாத விழியாத கண்ணார் -அயில் புயலாகப் பகைசூழும் பொழுதாதல் கண்டும் புழுவாக இனம்வீழும் நிலையாவுங் கண்டும் செயல்காணத் துணிவேதும் உருவான துண்டா? சிறிதேனும் உணராமல் சிலையாக நின்றார் -- -அயில் பெரியாரும் அறிவாளர் பலபேரும் வந்து பெரும்பாடு பட்டாலும் உருவான தென்ன? அறியாமை இருள்மூழ்கித் தடுமாறு கின்றார் அணுவேனும் நகராமல் மரமாகி நின்றார் -அயில் (24.6.1979) *一つ