பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Løð தமிழக அரசு முடியரசர் தமக்குரிய அரசைப் பற்றி முத்தமிழ்ப்பா வாணரெல்லாம் புகழ்ந்து பாடக் கடிநகருள் அரியணையில் வீற்றி ருந்து கற்பனையில் திளைத்திருந்த என்னை யிங்குக் குடியரசைத் தமிழரசைப் பாடு கென்று கூறிவிட்டார்; குறைநிறையைத் துணிந்து சொல்ல முடியரசன் தகுவனென நின்ைந்தார் போலும்; முயல்கிறேன் குறைகாணின் அதுவும் சொல்வேன் பண்டையநல் லரசுக்குக் கொடிகள் மூன்று பைந்தமிழ்நாட் டரசுக்குக் குறிகள் மூன்று தொண்டுபுரி செயல்மேவும் ‘கடமை/ஒன்று */ தாய்மை மிகு “கண்ணியமாம்” தன்மை ஒன்று கண்டபடி சிதறாமல் தலைவன் சொல்லைக் காக்கின்ற "கட்டுப்பா ட்ென்னும் ஒன்று தண்டமிழ அரசுக்கு வழிவ குத்த "தலைவன்றன் பெயருக்கும் மூன்றெ ழுத்து. தலைவன்-பேரறிஞர் அன்னா