பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கல் விழா எண் சீர் விருத்தம் கருநீலங் குழைத்தெடுத்துக் கரைந்து ஞாலம் g/ கண்ணுக்குப் புலனாகா வண்ணம் பூசிப் #| பொருள்யாவும் மறைந்ததுபோல் உலகில் யாண்டும் தி/ புகுந்ததனை விழுங்கிவரும் இருளின் கூட்டம் மருளோடு வெருண்டோடச் செய்து, கீழை வான்வெளியைச் சிவப்பாக்கிப் புதிய ஆட்சி உருவாக்தி, விழித்தெழுந்தோர் நெஞ்சமெல்லாம் 左 உவப்பாக்கிச் செங்கதிரோன் தோன்றக் கண்டேன் சிறைவிடுத்துச் சிறைவிரித்துச் செவ்வான் கண்டு சிந்தைகளி கூர்ந்துபல விந்தை செய்து உறைவிடத்துக் கிளைகடோறும் ஒடிஆடி ஒலியெழுப்பும் புள்ளினைப்போல் என்றன் பிள்ளை திரையுடுத்த துகில்விரித்த அணைவி டுத்துச் சிறுவிழியின் இமைவிரித்துச் சிரித்தெ ழுந்து குறைகுடத்துப் புனலொளிபோல் வாயால் நாவாற் குரலெழுப்பித் தள்ளாடி திரியக் கண்டேன்.