இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தீப்பொறி தோற்றத்தால் முதல்மாந்தன், தொல்லுலகில் முதன்மொழியைத் தோற்று வித்த ஏற்றத்தால் முதல்மாந்தன், ஈடில்லா தந்ாகரிக இயல்பு காட்டும் ஊற்றத்தால் முதல்மாந்தன், உயர்மறத்தைப் போர்க்களத்தில் உணர்த்தி நிற்கும் சீற்றத்தால் முதல்மாந்தன், சீர்மிகுத்து வாழ்ந்தவன்றான் சிதறிக் கெட்டான். சாதிதரும் பிரிவுகளைச் சமயத்தின் பொய்மைகளைச் சடங்கு தம்மை ஒதிவருஞ் சழுக்கர்களை ஓராது ஒ நம்பியதால் உணர்வி ழுந்தான்; பாதிமதி உடையவனாய்ப் பாழ்பட்ட வாழ்வினனாய்ப் பான்மை கெட்டான் மேதினியின் மேல் மகன்றான் மேவலராற் கீழ்மகனாய் வீழ்ந்து விட்டான்