பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்ப்பானை ஓட்டையானால்...? சாதிக்குச் சாதியிங்கு மோதிக் கொண் டழிகின்ற சேதி யுண்டு வீதிக்கு வீதியிங்குப் போதிக்கும் பள்ளிக்குஞ் சாதி யுண்டு வாதிக்க வாயில்லை, வாழ்விக்க வழியில்லை, வாழ்ந்த நம்மைப் பாதிக்கும் நிலையுண்டு பாழ்பட்ட பிரிவுண்டு பாராய் தம்பி! பார்ப்பானைத் திட்டுகிறாய் பாடு.பல படுகின்றாய் பயன்தான் உண்டா? சேர்ப்பாரை ஒன்றாகச் சேர்க்காமல் o செயன்முறையி, செய்து காட்ட இ/ ஏற்பாடு செய்யாமல் எத்தனைதான் முயன்றாலும் என்ன கண்டாய்? நீர்ப்பானை ஒட்டையடா! நிரப்புகிறாய் தண்ணிரை, நிறைதல் உண்டோ?