பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்றோர் செய்த பிழை கற்றில ராகினும், மற்றுயர் குணநலன் அற்றன ராகினும், அரும்பொருள் பெற்றவர் முற்றதன் மதிப்பினைப் பெற்றிடல் காண்குதும்; தமக்கென ஒருதொழில் தாங்கில ராகி உமக்கும் எமக்கும் உருகுதல் போல மயக்குறப் ಸ್ಥೈ। நாளொரு மேடையில் நண்டபயில் அரசியல் வாதியர் தமக்கும் வழங்குவர் மதிப்பு: தடவிய பொடியால் தகதக முகத்து நடிகர் தமக்கும் நன்மதிப் பளிப்பர்; ஆன்றவிந் தடங்கிய சான்றோர் தமக்கோ ஏன்தர மறந்தனர் ஏற்றதன் மதிப்பை? பெரும்பொருள் தேடா திருந்தனர் அது பிழை; அரசியல் ஒந்தி ஆகிலர் அது பிழை; பொடியால் உடையால் புதுமெரு கேற்றும் நடிகர் ஆகவும் நயந்திலர் அதுபிழை; இற்றை நிலையினை எண்ணுங் காலை பற்றி எரியும்என் பாழ்படு நெஞ்சே. 2?- 学ーV*アg子