பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேர்தல் நினைவு இரவெனும் நங்கை வந்தாள் என்விழி துயிற்ற எண்ணிப் பிறையினிற் குளிரெ டுத்துப் பிச்சியில் மணமெ டுத்து வருமிளந் தென்றல் கொண்டு வீசினள்; வைய மெல்லாம் இருளிய பின்னும் என்றன் இமைகளோ இணைய வில்லை. தேர்தலை நினைந்து விட்டேன் சிந்தையும் உறங்க வில்லை; நேர்மையை அங்குக் காணேன் பொய்ம்மையே நெளியக் கண்டேன்; தேர்வரும் நாளைப் போலத் தெருவெலாம் கூச்சல் கேட்டேன் ஊர்வலம் பலவுங் கண்டேன் உண்மையை காண வில்லை.