பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14. பற்றிப் படரும் ‘பற்றுதல்’

‘மனத்தை அலையவிடும் மாந்தர் பற்றுதலுக்கு இடம் கொடுக்கின்றனர்; அந்தப் பற்றுதல் ஆசைக்கு இடமளிக்கிறது. ஆசையினால் சினம்; சினம் குழப்பத்துக்குக் காரணமாகிறது. குழப்பத்தின் விளைவு தெளிவின்மை. அத்துடன் அறிவு தொலைகிறது. பிறகு அழிவுதான்’ என்பது கீதை உரை.

‘பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ என்ற வள்ளுவர் வாக்கும் இதையே சுருக்கமாக உரைக்கிறது.

‘பற்றுதல்’ என்ற சொல், மனிதருக்குரிய ஒழுக்க நெறி அனுமதிக்காத ‘பற்றுதல்’ என்ற பொருளில் இந்த இடங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது. இயற்கை வகுத்த தடத்தோடு வாழ்க்கையில் புலனின்பங்கள் எல்லாவற்றையும் மனிதர் துறந்துவிட வேண்டும் என்று இவ்வுரைகள் குறிப்பிடவில்லை. ஏனெனில் துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே மேலானது; அது இன்றியமையாத சமுதாய ஒழுக்கம் என்பதை வள்ளுவர் வாக்கே, ‘துறந்தார்க்கும் துவ்வாதவருக்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான்துணை’ என்று அறிவுறுத்துகிறது. எனவே, ‘பற்றுதல்’ என்பது, ஒருவரின் மனச்சான்றை மழுங்கடிக்கும் வகையில் உள்ளே நுழைந்து வலிமை பெறக்கூடிய தீமை அதற்கு இடம் கொடுத்தால் பேராசை என்ற பெருங்காற்று வீச, அது விரைவில் மனிதத் தத்துவத்தையே சுட்டுப் பொசுக்கிவிடும் என்று எச்சரிக்கையாகக் குறிப்பிடப்படுகிறது.

தன்னலமற்ற அன்பு பாராட்டி அனைவருடனும் பகை இல்லாமல் வாழ வேண்டும் என்று அக்காலத்தில் கதைகள்