புலியார் நட்பு 45
இயைந்த கேண்மை இல்லா கியரோ! கடும்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென அன்(று).அவண் உண்ணு(து)ஆகி வழிநாள் பெருமலை விடர்.அகம் புலம்ப வேட்(டு)எழுந்(து) இரும்களிற்(று) ஒருத்தல் நல்வலம் படுக்கும் புலிபசித்(து) அன்ன மெலிவில் உள்ளத்(து) உரன்உடை யாளர் கேண்மையொடு) இயைந்த வைகல் உளவா கியரோ! ‘
(புறம்: 190)
விளைபதம்-முற்றிய பருவம்; வல்சி-உணவு, அளை-வளை, வளன்-செல்வம், வலி உறுக்கும்இறுகப் பிடிக்கும்; கேண்மை-நட்பு: கேழல்-பன்றி, வழிநாள்-மறுநாள்; விடர்.அகம்-குகை, புலம்பதனித்துவிட, இருங்களிறு-பெரிய ஆண்யானை, உரன் உடையாளர்-நெஞ்சு வலிமை உடையார்; வைகல்-நாட்கள்)
உலகில் வாழும் மனிதர்கள் பலதிறப்படுவர் எனினும், இப்பாடல் பாடிய கவிஞன் அவர்களை இரண்டே பிரிவில் அடக்கிவிடுகிறான். முதற் பிரிவினர் எலியைப் போன்றவர். மனிதனுக்கு வேண்டப்படும் குறிக்கோள் என்பது சிறிதும் அற்று, எவ்வாறாயினும் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற இந்த எலிக் கூட்டத்தார் இன்றும் உலகிடை மிகுதியாகக் காணப்படுகின்றனர். இத்தகையவர்கள் வாழ்வில் தமக்காகவோ பிறருக் காகவோ முயற்சி சிறிதும் செய்யமாட்டார்கள். ஆனால், தமக்குரிய நலங்களையும் விட்டுக் கொடுக்க