பக்கம்:புதிய தமிழகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 புதிய தமிழகம்

கங்கையாற்றில் நந்தர்கள் தங்கள் செல்வத்தைக் கங்கை யாற்றின் அடியில் புதைத்து வைப்பது என்று முடிவு செய்தனர். ஆற்றின் நடுவில் நீரோட்டத்தை இரு பிரிவுகளாகப் பிரித்தனர்; இரண்டு பிரிவுகளுக்கு இடையே இருந்த மணற்பரப்பின் கீழ் உறுதியான நிலவறையைக் கட் டினர்; கற்சுவர்களில் ஈய்த்தை உருக்கி வார்த்தனர்; இங்கனம் உறுதியாக அமைக்கப் பெற்ற அந்த கில வறையில் ஐந்து அறைகளைக் கொண்ட பெட்டியை வைத்தனர்; அப் பெட்டியில் பொன்னேயும் மணியை யும் நகைகளையும் குவித்து நிரப்பினர்; நிலவறையை மூடி அம் மூடியின் மீது ஈயத்தை உருக்கி வார்த்தனர்; பின்பு முன் போலவே நீரோட்டத்தை ஒழுங்காகச் செல்ல விடுத்தனர்.

இச் செய்தி சந்திரகுப்தன் வரலாறு என்னும் தெலுங்கு நூலில் குறிக்கப் பட்டுள்ளது. இச் செய்தியை ஒரு தமிழ்ப் பெண் அறிந்திருந்தாள்; அவள், மிக்க புகழ் வாய்ந்த நந்தர்கள் பாடலி புரத்தில் கூடிக் கங்கை யாற்றின் அடியில் புதைத்து வ்ைத்த செல்வம், நம் தலே வர் குறித்த காலத்தில் வராமைக்குக் காரணமாக இருக் குமோ?" என்று ஐயப்பட்டாள். இச் செய்தியை அக நானூற்றுப் பாடலொன்று அறிவிக்கின்றது:

“பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர் மிகு பாடலிக் குழிஇக் கங்கை நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ?” இத்தகைய பல அரிய செய்திகள் அக்காலத் தமிழ்ப் பெண்கள் அறிந்திருந்தனர் என்பதை அக நானூறு அறிவிக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/68&oldid=641940" இலிருந்து மீள்விக்கப்பட்டது