பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 38

களில் காண்கிருேம். ஒருவர் நோக்கு மற்றவருக்கு இல்லை. ஒருவர் அனுபவம் மற்றவரிடமிருந்து மாறுபட்டது. அவரவர் நம்பிக்கையும் வேறு வேறு. அவரவர் சொல் திறனும் நானவிதமானது. அவநம்பிக்கையும் நம்பிக் கையும், சமுசயமும் தன்னம்பிக்கையும், கவலையும் உறுதியும் ஆசையும் ஆதங்கமும் லட்சியமும் யதார்த்தமும் உண் மையும், போலியைக் கண்ட ஆத்திரமும் எத்தனை விதமாக ஒலிக்கின்றன இவர்கள் குரல்களில்!”

எழுத்து பிரசுரம் ஆன புதுக்குரல்கள் பற்றிய ஒரு அறிவிப்பு இது. 1962 அக்டோபரில் இத்தொகுப்பு வெளியா ஒற்று. அதுவரை எழுத்து வின் அச்சாகியிருந்த சுமார் 200 கவிதைகளிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றன.

இந்த தொகுப்பு தெரிவுக்கு பொறுப்பு நான்தான் என்ருலும் (சுமார் 200 கவிதைகளிலிருந்து 63 கவிதைகளை தேர்ந்தெடுப்பதில்) தன்மூப்பாக நடந்து கொண்டு விடவில்லை நான். நண்பர்கள் சி. மணி, பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், எம். பழனிசாமி, ஆர். வெங்கடேசன், என். முத்துசாமி ஆகியரிேடமிருந்து தெரிவு பட்டியல்களே கேட்டு வாங்கி என்னுடையதையும் சேர்த்து முடிவு செய்தது இது. அவர்கள் குறிப்பிடாததும் சில சேர்க்கப் பட்டிருக்கும். ஆலுைம் புதுக் கவிதைத் துறையில் நல்ல ஈடுபாடுள்ள ஆறேழு பேர்கள் மதித்தவை அடங்கிய தொகுப்பு இது. அவர்கள் உதவி இன்றி என் வேலை சுளுவாகி இராது. எனக்குள் உள்ள இருட்டடிப்புகள் என் தெரிவுக்கு குந்தகம் விளைவித்திருக்கவும் கூடும்’ என்று சி. சு. செல்லப்பா, இத்தொகுப்புக்கு உரிய கவிதைகள் தேர்ந்து எடுக்கப்பட்ட விதம் பற்றி, முன்னுரையில் குறிப் பிட்டிருக்கிருர். அவருடைய நேர்மை பாராட்டப் பட வேண்டிய பண்பு ஆகும். ×

செல்லப்பா இத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை (துழை வாசல்) நல்ல ஆய்வுரையாக அமைந்துள்ளது.